கைபேசியை கொள்ளையடித்த இருவர்… CCTV வைத்து, ஆறு மணி நேரத்திற்குள் தட்டி தூக்கிய போலீஸ் – காத்திருக்கும் 12 பிரம்படி

2 men arrested assaulting robbing

ஜூரோங் வெஸ்டில் 63 வயதுடைய ஆடவர் ஒருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 23 மற்றும் 44 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மே 31 அன்று நள்ளிரவு 12.45 மணியளவில், ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 52ல் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து  தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் பல மாதங்களாக வேவு பார்க்கும் ஆடவர்!

அந்த ஆடவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன் பாதிக்கப்பட்டவரின் கைபேசியையும் கொள்ளை அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து, அந்த இருவரின் அடையாளத்தை கண்டறிந்த அதிகாரிகள், குற்றம் நடந்த ஆறு மணி நேரத்திற்குள் அவர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டவுடன் பாதிக்கப்பட்டவரின் கைபேசியும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

திருட்டில் ஈடுபட்டு, தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதாக அவர்கள் இருவர் மீதும் இன்று புதன்கிழமை (ஜூன் 1) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

இந்தக் குற்றத்திற்கு ஐந்து முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

பெண் ஒருவரை ஏமாற்றி பலே திட்டம்… தமிழக ஆடவர் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு!