பெண் ஒருவரை ஏமாற்றி பலே திட்டம்… தமிழக ஆடவர் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு!

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அந்த பெண்ணிடம் இருந்து ஆடவர் 3 சவரன் நகையை வாங்கி ஏமாற்றியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 3 ஊழியர்கள் மரணம் – குடும்பத்தை எண்ணி பாதுகாப்புடன் இருக்க வேண்டுகோள்!

நாமக்கல் பகுதியை சேர்ந்த 32 வயதுமிக்க பெண் ஒருவர் இதில் ஏமாற்றப்பட்டுள்ளார், இவர் திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரிந்த அந்த பெண் ஊழியர், சில மாதங்களுக்கு முன்பாக தன் சொந்த ஊர் திரும்பினார்.

இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு சிதம்பரம் பகுதியில் வசிக்கும் 35 வயதான கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என கூறி, நெருங்கி பழகி, 3 சவரன் நகையை பெற்று, கடைசியாக ஏமாற்றி உள்ளார் கார்த்திக்.

பின்னர், இது குறித்து அந்த பெண் ஊழியர் சிதம்பரம் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதன் பேரில், அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 5 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இது குறித்த போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர் குடியிருப்புகளில் அதிக தொந்தரவு செய்யும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க எளிய வழிமுறைகள்..!