தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் 2 பிரைம் மூவர்ஸ் வாகனம் விபத்து: ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி

2-prime-movers-in-accident-along-tpe

தெம்பனீஸ் அதிவிரைவு சாலையில் (TPE) இரண்டு பிரைம் மூவர்ஸ் விபத்துக்குள்ளானதில் 37 வயதான ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை (அக். 14) காலை 9.40 மணியளவில் விபத்து நடந்ததாக ஸ்டாம்ப் கூறியுள்ளது.

லாரியில் கடத்தல் வேலை: உதவிய ஊழியர் – சிங்கப்பூரருக்கு சிறை

அதில் பகிரப்பட்ட காணொளியில், சம்பவ இடத்தில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) வாகனங்கள், ஆம்புலன்ஸ் இருப்பதைக் காணமுடிகிறது.

காலை 9 மணியளவில் TPE வழியாக Pan-Iland Expressway (PIE) நோக்கி நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், 37 வயதான பிரைம் மூவர் ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று… மீண்டும் தடுப்பூசி – ஏற்கனவே 4,000 பேர் போட்டாங்க