இரண்டு பெண்களிடையே கடும் சண்டை: பொறாமை தான் காரணமாம்

இரண்டு பெண்களிடையே கடும் சண்டை: பொறாமை தான் காரணமாம்
Shin Min Daily News

ஃபேரர் பார்க் குடியிருப்பு பகுதியில் இரண்டு பெண்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், ஒருவருக்கொருவர் பொருட்களை வீசி எறிந்து கொண்டதால் அது வன்முறை மோதலாக மாறியது.

இறந்து கிடந்த போலீஸ் அதிகாரி.. “வேலையிடத்தில் பாகுபாடு, துன்புறுத்தல்” – பதிவு வெளியிட்டு மரணம்

47 மற்றும் 49 வயதுடைய அவர்கள் இருவருக்கும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

ரங்கூன் சாலையில் உள்ள 23B சிங் அவென்யூவில், கடந்த செவ்வாயன்று (ஜூலை 18) இரவு 10:40 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

இரண்டு பெண்களுக்கிடையேயான இந்த வாக்குவாதம் பொறாமை காரணமாக ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்டபோது அது வாக்குவாதமாக வெடித்ததாகவும் ஷின் மின் நியூஸ் தெரிவித்தது.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

இந்தியரை காணவில்லை – பொதுமக்களிடம் உதவி கோரும் சிங்கப்பூர் போலீசார்