சிங்கப்பூரில் தனித்தனி வேலையிடங்களில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கிய இரண்டு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒருவர் ஃபோர்க்லிஃப்ட் இயந்திரத்தில் சிக்கியும், இன்னொருவர் லிப்ட் அமைப்புக்குள் விழுந்தும் இறந்ததாக வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார (WSH) அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கூறிய அந்த இரு சம்பவங்களும் கடந்த மாதம் ஏப்ரல் நடந்ததாக WSH தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முதல் ஊழியர்
கடந்த ஏப்ரல் 18 அன்று நடந்த முதல் சம்பவத்தில், புதிதாக கட்டப்பட்ட லிப்ட் அமைப்புக்குள் விழுந்த ஊழியர் 6 மீட்டர் வரை கீழே தரை பகுதிக்கு சென்றதாக சொல்லப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஊழியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் இறந்தார் என்று WSH கூறியுள்ளது.
இரண்டாம் ஊழியர்
இரண்டாவதாக கடந்த ஏப்ரல் 28 அன்று, ஃபோர்க்லிஃப்டை பழுதுபார்க்க இருந்த தொழில்நுட்ப ஊழியர் அந்த இயந்திரத்தில் சிக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில், இயந்திரத்தின் முன் கட்டமைப்பு ஊழியர் மீது விழுந்தது.
அதன் பின்னர் அங்கிருந்த துணை மருத்துவர்கள் ஊழியரை சோதித்தில் அவர் சம்பவ இடத்திலேயே மரணித்ததை உறுதி செய்தனர்.
இந்த ஆண்டு இதுவரை பதினொரு வேலையிட இறப்புகள் பதிவாகியுள்ளதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.