சிங்கப்பூரில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் 21 வயது ஆடவர் இறந்தார் என சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து அங் மோ கியோ ஸ்ட்ரீட் 22 மற்றும் அங் மோ கியோ அவென்யூ 1 சந்திப்பில் கடந்த ஜனவரி 17 அன்று மாலை சுமார் 6.15 மணியளவில் நடந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து மோட்டார் சைக்கிளோட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அதன் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் 29 வயதுமிக்க லாரி ஓட்டுநரான வெளிநாட்டு ஊழியர் அதிர்ச்சி நீங்காமல் சாலை ஓரத்தில் அமர்ந்து இருப்பதை காண முடிந்தது.
“திடீரென பலத்த சத்தம் மட்டும் கேட்டது, அப்போது லாரி ஆட்டம் கண்டதை உணர்ந்தேன்” என்று அவர் கூறினார்.
வேலை முடிந்து தனது சக ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக அந்த ஓட்டுநர் சென்று கொண்டிருந்தார் என கூறப்பட்டுள்ளது.
“(ஓட்டுநர்) பல வருட ஓட்டுநர் அனுபவம் கொண்டவர், மேலும் அவர் எப்போதும் மிகவும் எச்சரிக்கையாக வாகனம் ஓட்டுபவர்” என ஓட்டுநரின் மேலாளர் ஷின் மினிடம் கூறினார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணைதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு