யுஷுன் அவென்யூ 5ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 13) மூன்று கார்கள் விபத்துக்குள்ளானதில் ஆடவர் ஒருவரும் இரண்டு பெண்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து அன்று இரவு 11.25 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டர்லிங் சாலையில் கனமழையால் வெள்ளம்: “பழைய பாரம்பரியப் பகுதி… அக்கறை வேண்டும்” – வாசகர் கருத்து
இதில் 46 வயதான ஆண் ஓட்டுநர், அவரது 71 வயது பெண் பயணி மற்றும் மற்றொரு 64 வயது பெண் ஓட்டுநர் ஆகியோர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
விபத்து எப்படி ஏற்பட்டது, யார் மீது தவறு என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீசார் விசாரணைக்கு பின்னே உண்மை தெரியவரும்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் – பயணிகளுக்கு ஆலோசனை