போலீசாரிடம் பிடிபட்ட மொத்தம் 325 பேரிடம் விசாரணை

சிங்கப்பூர்: பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 325 பேரிடம் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதில் சுமார் S$9 மில்லியனுக்கும் அதிகமாக தொகையை பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி மற்றும் செப் 1 ஆம் தேதிக்கு இடையில் தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வார சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர்.

வயது 16 இல் இருந்து 86 க்கு இடைப்பட்ட அவர்களில் 201 ஆண்கள் மற்றும் 124 பெண்கள் அடங்குவர்.

மயங்கி விழுந்த நபர்.. விரைந்து சென்று உதவிய மருத்துவர் – நெட்டிசன்கள் “கிரேட் டாக்டர்” என பாராட்டு

சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கை… வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது – ரூல்ஸ் ரொம்ப முக்கியம்