சிங்கப்பூரில் ஒரே நாளில் 328 நபர்கள் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து ஒரே நாளில் 328 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 8) குறிப்பிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது ஆக அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 115 பேர் குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் சுமை வாட்டுகிறது சிங்கப்பூரில் வேலைசெய்யும் மலேசியர்களின் மன வேதனை..!

அதாவது மொத்தம் 2,040 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 1,245 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 18,402 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 768 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!