சிங்கப்பூரில் நண்பகல் (மே 25) நிலவரப்படி, புதிதாக 344 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 31,960ஆக உயர்ந்துள்ளது.
புதிய சம்பவங்களில், 4 பேர் சிங்கப்பூரர் மற்றும் நிரந்தரவாசி என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மீதமுள்ள சம்பவங்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.