சிங்கப்பூரில் சந்தேகத்திற்கிடமான 348 நபர்களிடம் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அவர்கள் 15 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அதில் 235 ஆண்கள் மற்றும் 113 பெண்கள் அடங்குவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லாரியில் பாதுகாப்பு இல்லை… வழக்கில் வெற்றிபெற்ற வெளிநாட்டு ஊழியர் – இழப்பீடு S$100,000 ?
சுமார் 13.2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை இந்த மோசடியில் இழந்திருப்பதாகவும் சந்தேகப்படுவதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதில் வேலை, முதலீடு, அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம், மின்னணு வணிகம் மற்றும் இணைய மோசடிகள் உட்பட 1,400 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் அவர்கள் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
இரண்டு வார சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.