புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, நேற்று (அக்.07) ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக, நேற்று (அக்.07) காலை 05.00 மணிக்கு வெங்கடாஜலபதிக்கு மலர்களாலும், ஆபரணங்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் கோமாதா பூஜைகள் என சுப்ரபாதம் பூஜைகள் விமர்சையாக நடைபெற்றது.
இந்த நாட்டின் பகுதிக்கு பயணிக்க வேண்டாம் – சிங்கப்பூர் அறிவுறுத்தல்
அதிகாலை முதலே ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தன. பின்னர், நடைபெற்ற சுப்ரபாதம் பூஜைகளை கோயில் வளாகத்தில் அமர்ந்து கண்டுகளித்தனர். அதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.