“இனி சிங்கப்பூரில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை” – குளியலறை கதவு கீழே கைபேசியை நுழைத்து வீடியோ எடுத்த நபர்கள் – மனமுடைந்த பெண்

PHOTO: Drealya Tan

உடற்பயிற்சி கூடத்தில் உள்ள குளியலறையில் பெண் ஒருவர் குளிக்கும்போது தாம் ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தாய் செங்கில் உள்ள Strength Masters உடற்பயிற்சி கூடத்தில் கடந்த செப். 29 அன்று நடந்தது.

சிகரெட் தொடர்பான விவகாரம்.. தங்கும் விடுதி அருகே சட்டவிரோத செயல்… சிக்கிய வெளிநாட்டு ஊழியர்கள் 5 பேர்

இதனால் அச்சத்தில் உறைந்துபோன 26 வயதான Drealya Tan என்ற அந்த பெண், இரண்டு நாட்களுக்கு தனது வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

மேலும், தனது அந்தங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர் உடைந்துபோனதாகவும் கூறியுள்ளார்.

குளியலறையில் தனது ஆடைகளை அவிழ்த்த பிறகு, கதவுக்கு அடியில் ஒரு ஐபோன் கைபேசியை யாரோ நீட்டி வீடியோ எடுப்பதை டான் கவனித்தார், கைபேசியின் கேமரா லென்ஸ் அவரை நோக்கி இருந்ததாக அவர் கூறினார்.

இதை கண்ட அவர், உதவி வேண்டி சத்தம் போட்டதாக கூறியுள்ளார், ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை என்று அவர் நினைவு கூர்ந்தார், ஏனெனின் அந்த நேரத்தில் பணியில் ஊழியர்கள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

பலமுறை ஜிம் ஊழியர்களை அழைக்க முயன்றதாகவும், என்ன செய்வதென்று தெரியாமல் அழுததாகவும் அவர் கூறினார்.

“ஆனால் யாரும் எனக்கு பதிலளிக்கவில்லை. அதிர்ச்சியிலும் நடுக்கத்திலும், காவல்துறையை அழைக்க முடிவு செய்தேன்” என்றார்.

இறுதியில், ஜிம் உரிமையாளரை டான் தொடர்பு கொண்டார். ஆனால் குற்றாவளி மேல் கோவம் கொள்ளாமல் அதற்கு பதிலாக டானிடம் “போலீசிடம் ஏன் புகார் செய்தீர்கள்” என உரிமையாளர் கேட்டதாக அவர் கூறினார்.

பின்னர் CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு ஆடவர்கள் அந்த கழிவறைக்கு வெளியே நின்றதை காட்டியது. அதன் பிறகு உரிமையாளர் மன்னிப்புக் கேட்டதாக டான் கூறினார்.

“இந்த சம்பவம் எனது மனதை கடுமையாக பாதித்துள்ளது” என்றார்.

“இனி சிங்கப்பூரில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை, ஆனால் இந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை விட்டு வெளியே வருவேன் என்ற மன உறுதியுடன் இருக்கிறேன்” என்று கவலையுடன் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இன்றும் புகைமூட்டம் தொடரும்.. ஆரோக்கியமற்ற நிலையை எட்டிய PSI குறியீடு