சாங்கி ஏர்போர்ட் முனையம் 3 அருகே நான்கு வாகனங்கள் விபத்து

changi-airport-accident
Stomp

சாங்கி விமான நிலைய முனையம் 3 அருகே நான்கு கார்கள் சம்மந்தப்பட்ட விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகில் இதுபோன்ற விபத்தை நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை என்று வாசகர் ஒருவர் கூறினார்.

விடுமுறை நாளில் கடலில் குளித்து மகிழ்ச்சியாக இருக்க சென்ற அண்ணன்-தம்பி நீரில் மூழ்கி மரணம்

இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை (டிச 9) நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இதனை சரிசெய்ய போலீஸ் அதிகாரிகள் பலர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று இரவு 9.33 மணியளவில் 65 ஏர்போர்ட் பவுல்வர்டில் நடந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இது குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த ஊழியர் விபத்தில் மரணம்: விடுமுறையை குடும்பத்துடன் கழிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்