சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்காக தன் சொந்த ஊருக்கு திரும்பிய தமிழக ஊழியர் விபத்தில் உயிரிழந்த செய்தி நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
34 வயதான ஊழியர் குமரவேல் சின்னசேலம் சண்முகாநகர் முதல் தெருவை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அவர் விடுமுறை முடிந்த பின்னர் மீண்டும் சிங்கப்பூர் செல்வதற்கு ஏற்பாடு செய்து வந்தார்.
அச்சமயம் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் சென்ற குமரவேல் வேலைமுடித்து மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததால் திடீர் பிரேக் பிடித்த காரணத்தால் குமரவேல் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த குமரவேல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.