சிங்கப்பூரில் 31 முதல் 45 வயதுக்குட்பட்ட ஐந்து சிங்கப்பூரர்கள் போதைப்பொருள் நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள், புவாங்கோக் கிரெசண்ட், யீஷூன் அவென்யூ 4, குவீன் ஸ்டிரீட் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!
இந்த சோதனையின் போது, பலவகையான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக CNB தெரிவித்துள்ளது.
மேலும், இதில் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் மொத்த மதிப்பு S$58,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று CNB வியாழக்கிழமை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பல இடங்களில் நடந்த இந்த அதிரடி சோதனையின் போது S$58,306 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்கள் அனைவரிடம், போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : சிங்கப்பூர் அறிவியல் நிலையம் மற்றும் Snow City இன்று முதல் மீண்டும் திறப்பு..!