சிங்கப்பூரில் போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைது..!

5 arrested for suspected drug activities after raids in Yishun, Buangkok
5 arrested for suspected drug activities after raids in Yishun, Buangkok (Photos: Central Narcotics Bureau)

சிங்கப்பூரில் 31 முதல் 45 வயதுக்குட்பட்ட ஐந்து சிங்கப்பூரர்கள் போதைப்பொருள் நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள், புவாங்கோக் கிரெசண்ட், யீஷூன் அவென்யூ 4, குவீன் ஸ்டிரீட் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எதிர்வரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.!

இந்த சோதனையின் போது, பலவகையான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக CNB தெரிவித்துள்ளது.

மேலும், இதில் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் மொத்த மதிப்பு S$58,000-க்கும் அதிகமாக இருக்கும் என்று CNB வியாழக்கிழமை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் பல இடங்களில் நடந்த இந்த அதிரடி சோதனையின் போது S$58,306 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் அனைவரிடம், போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூர் அறிவியல் நிலையம் மற்றும் Snow City இன்று முதல் மீண்டும் திறப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg