சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், வெப்பநிலை அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், சில நாட்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை தொடரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் OCBC வங்கி வாடிக்கையாளர்கள் இனி SingPassஐப் பயன்படுத்தி டிஜிட்டல் வங்கிச் சேவையைப் பயன்படுத்தலாம்..!
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மாதம் முழுவதும் மழையின் அளவு சராசரிக்கு அதிகமாய் இருக்கும் என்று வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.