சிங்கப்பூரில் புதிதாக 533 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி.!

சிங்கப்பூரில் நண்பகல் (மே 27) நிலவரப்படி, புதிதாக 533 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 32,876ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், மூன்று பேர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.