சாலையில் செல்லும் ஆண்களிடம் விலை பேசும் பெண்கள்… தகாத உறவுக்கு அழைப்பு – சிக்கிய 6 பேர்

Singapore Police Force

பாதசாரிகளிடம் பணம் பெற்று முறைகேடான உறவுக்கான சேவைகளை வழங்க முன்வந்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 35 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள், ஒருவர் சிங்கப்பூரர், 3 பேர் நிரந்தரவாசிகள், மீதமுள்ள 2 பேர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பாரம்பரியமாக ஆண் ஊழியர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், அதிகப் பெண்களை ஈர்க்க திட்டம்!

இந்நிலையில், தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்கள் அனைவருக்கும் ஆக.17 நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.

ஆர்ச்சர்ட் டவர்ஸ் அருகே அவர்கள் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றச்சாட்டையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இறுதியாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா S$800 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அதேபோல, உரிமம் இல்லாமல் மசாஜ் சேவைகளை வழங்கிய 35 வயதான சிங்கப்பூரர் பெண்ணுக்கு கூடுதலாக S$6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வசிக்கும் 6 பேரில் ஒருவர் இந்த அபாயத்தில் உள்ளார்… TikTok, Instagram போன்ற சமூக ஊடங்களால் பாதிப்பு!