“61 வயது பெண்ணை 10 நாட்களுக்கும் மேலாக காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

"61 வயது பெண்ணை 10 நாட்களுக்கும் மேலாக காணவில்லை"- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!
Photo: Singapore Police Force

 

சிங்கப்பூரில் 61 வயது சைனீஸ் பெண்ணை 10 நாட்களுக்கும் மேலாக காணவில்லை என்று சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

S$7.50 செலுத்துவதற்கு பதிலாக S$750 செலுத்திய வாடிக்கையாளரைத் தேடும் கடையின் உரிமையாளர்!

இது குறித்து சிங்கப்பூர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சிங்கப்பூரில் வசித்து வந்த 61 வயது சைனீஸ் பெண்ணை கடந்த நவம்பர் 29- ஆம் தேதி அன்று மதியம் 02.00 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, தியோங் போ சாலைக்கு (vicinity of Tiong Poh Rd) அருகில் காணப்பட்டுள்ளார். வெளிர் நிற மேலாடையையும், கருப்பு நிற பேண்ட்டையும் அணிந்திருந்துள்ளார். இவரை யாரேனும் பார்த்தாலோ (அல்லது) தகவல் கிடைத்தாலோ உடனடியாக, 999 என்ற சிங்கப்பூர் காவல்துறையின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் போனவரின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது.

ART கருவிகளை வாங்கி குவிக்கும் பொதுமக்கள் – சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காணாமல் போன பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.