சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 65 வயது சீன பெண்ணை, கடந்த டிசம்பர் 9- ஆம் தேதி முதல் அன்று இரவு 08.33 PM மணி முதல் காணவில்லை. இந்த பெண் கடைசியாக, ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் (East Coast Park) காணப்பட்டுள்ளார். அப்போது, வெள்ளை நிற மேலாடை மற்றும் சாம்பல் நிற பேண்ட் (Light Grey Shorts) மற்றும் பிங்க் நிற காலணியை அணிந்திருந்துள்ளார்.
இந்த விலைதான் நமக்குக் கட்டுப்படியாகும்! – செஞ்சா உணவங்காடியில் குவியும் மக்கள்!
இந்த பெண்ணை யாராவது பார்த்தாலோ (அல்லது) பெண்ணை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த ட்விட்டர் பதிவுடன் காணமல் போனவரின் புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்துள்ளது.