“70 வயதான இந்தியரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “70 வயதான இந்தியரை நவம்பர் 18- ஆம் தேதி அன்று மதியம் 01.00 மணி (சிங்கப்பூர் நேரப்படி) முதல் காணவில்லை. அவர் கடைசியாக, பிளாக் 314 அங் மோ கியோ அவென்யூ 3- ல் (Blk 314 Ang Mo Kio Ave 3) இருந்துள்ளார். அவர் பச்சை நிற டி-சர்ட் மற்றும் பச்சை நிற பெர்முடாக்கள் (Bermudas), செருப்பு அணிந்திருந்துள்ளார்.

திருச்சி, சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை வழங்கி வரும் விமான நிறுவனங்களின் பட்டியல்!

இவரை பொதுமக்கள் யாரேனும் பார்த்தாலோ (அல்லது) இவரைப் பற்றிய தகவல் கிடைத்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையினரின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளது. ட்விட்டர் பதிவுடன் காணாமல் போன இந்தியரின் புகைப்படத்தையும் காவல்துறை பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.