கல்லாங்-பாயா லெபார் அதிவிரைவுச் சாலையில் (KPE) வியாழன் மதியம் (அக் 27) ஒன்பது வாகனங்கள் சங்கிலி தொடராக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் 40 வயதுமிக்க பெண் கார் ஓட்டுநரும், 14 வயது பெண் பயணியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் அவரது காரில் இருந்த அனைத்து ஏர்பேக்குகளும் செயல்பட்டன.
ஊழியர்களுக்கு அடுத்தகட்ட தடுப்பூசி போடும் பணி விறுவிறு
சுமார் 4.45 மணியளவில் பார்ட்லி ரோடு ஈஸ்ட்க்கு அடுத்துள்ள KPE (TPE) சாலையில் எட்டு கார்கள் மற்றும் ஒரு வேன் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது
54 வயதான ஆண் கார் ஓட்டுநர், 38 வயதான பெண் கார் ஓட்டுநர் மற்றும் 43 வயதான வேன் ஓட்டுநர் ஆகியோர் போலீஸ் விசாரணையில் உள்ளனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த வாரம் KPE சுரங்கப்பாதையில் நடந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
போதைப்பொருளுடன் சிக்கிய பள்ளி மாணவர்கள் – கடத்தல் சந்தேகத்தில் 5 பேர் கைது