இப்படியும் ஒரு தாய்… நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கை..!

தனது பிள்ளைகளை காயப்படுத்தி துன்புறுத்தியதாக தாயாருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மூன்று பிள்ளைகளுக்கு தாயான அப்பெண், தனது மகள் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் Work pass அனுமதியை நீட்டித்து தர கோரிக்கை வைக்கும் ஊழியர்கள் – காரணம் என்ன?

குற்றச்செயலில் ஈடுபட்ட இப்பெண்ணை சிறையில் புலனாய்வு செய்யப்பட்ட பின்பு மனநல காப்பகத்துக்கு அனுப்பியதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

குற்றங்கள் புரியும்போது அப்பெண்ணுக்கு ஸ்கிட்சோ ஃபிரினியா என்னும் மனநோய் இருந்ததால் அவருக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிவித்துள்ளது.

அதற்க்கு பதிலாக அப்பெண்ணிற்கு நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு கட்டுமான வேலைக்காக வரலாமா?… ஊழியர்கள் படும்பாடு என்ன? சொல்ல மறந்த கதை!