ஆடி மாத நான்காம் வெள்ளியையொட்டி, சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை!

Photo: Hindu Endowments Board

 

ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையையொட்டி, ஆகஸ்ட் 11- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீ சிவன் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது.

லிட்டில் இந்தியாவில் சிறுமியை நாசம் செய்ததாக சிக்கிய மதுக்கடை உரிமையாளர்

குறிப்பாக, ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரமும், ஸ்ரீ சிவன் கோயிலில் சுவாமிக்கு மாங்கல்ய கயிறுகளால் ஸ்ரீ விசாலாக்ஷி அலங்காரமும் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பட்டுப்புடவை அணிவித்து மலர்களாலும், அபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது.

ஆடி மாத நான்காம் வெள்ளியையொட்டி, சிங்கப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை!
Photo: Hindu Endowments Board

ஸ்ரீ சிவன் கோயிலில் பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து இறைச்சி, கடல் உணவு பொருட்கள் இறக்குமதி – ஆடவருக்கு $15,000 அபராதம்

ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிங்கப்பூரில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், இந்து அறக்கட்டளை வாரியமும், கோயில் நிர்வாகங்களும் இணைந்துச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.