ஆவின் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு சொந்தமாக நடத்திவரும் செய்தி நாம் அனைவரும் அறிந்தது தான். அது பால் மற்றும் பால் சம்மந்தப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அதாவது பாக்கெட் பால், தயிர், பாலாடைக்கட்டி, மோர், பனீர், ஐஸ்கிரீம், குல்ஃபி, அதோடு மட்டுமல்லாமல் பால் கேக், பாயாசம் மிக்ஸ், பால் புரோட்டீன் நூடுல்ஸ் போன்ற பால் சம்மந்தப்பட்ட பல்வேறு பொருட்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் விற்பனையை அதிக பகுதிகளுக்கு விரிப்படுத்த அரசாங்கம் திட்டம் தீட்டி வந்த நிலையில், சிங்கப்பூருக்கு அந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்ய Ultra-high temperature என்னும் அதிக வெப்ப நிலையில் ஆவின் பால் தயார் நிலையில் உள்ளது.
அதன் வீடியோ மற்றும் படங்களை ஆவின் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
Aavin UHT Tetra pack milk being packed for export to Singapore!
சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆவின் பால் உயர் வெப்ப நிலையில் பதப்படுத்தி அடைக்கப்படுகிறது.#Aavin pic.twitter.com/XpAIBYuBSO
— Aavin TN (@AavinTN) March 26, 2022
இனி, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் தங்களுக்கு பிடித்தமான இந்த ஆவின் தயாரிப்புகளை சிங்கப்பூரிலும் பயன்படுத்த முடியும்.
சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்: 170 நாடுகளில், 5 லட்சம் பயணிகளுக்கு “இலவச விசா” வழங்கும் இந்தியா!