கல்லாங்-பாயா லெபார் விரைவுச்சாலையில் (KPE) நேற்று ஆகஸ்ட் 5 அன்று விபத்து ஏற்பட்டது.
அதை தொடர்ந்து 20 வயதுமிக்க ஆடவர் மற்றும் பெண் ஒருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல்… 39 வயதான ஆடவருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட் அதிரடி
5 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் தொடர்புடைய விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் அவரது பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
புகைப்படத்தில் இருக்கும் ஆணும், பெண்ணும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்