துவாஸில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் சிக்கிய 32 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
துவாஸ் சவுத் ஸ்ட்ரீட் 2 மற்றும் துவாஸ் சவுத் அவென்யூ 5 சந்திப்பில் வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
லிட்டில் இந்தியாவில் உள்ள நாணய மாற்று வர்த்தகரிடம் திருட்டு – இருவர் நீதிமன்றத்தில்
இது குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) தெரிவித்தன.
மோட்டார் சைக்கிள் ஓட்டி சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அவர் அங்கு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற 30 வயதுடைய ஆடவர் ஒருவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக 48 வயது கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்