சிங்கப்பூர்: 39 வயதான பெண் ஒருவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கார் அப்பர் தாம்சன் சாலையில் உள்ள வடிகாலில் விபத்துக்குள்ளானதாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை (மே 18) அதிகாலை நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயில்.. இலவசமாக பீர் வழங்கும் நிறுவனம்… இரவில் அன்லிமிடெட் பீர் – குவியும் மக்கள்
அந்த காரை 39 வயதான பெண் ஓட்டுநர் ஓட்டி வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.
அன்று அதிகாலை 4:15 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து கார் தானாகவே சறுக்கியதால் ஏற்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் பெண் ஓட்டுனரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.