‘புதிதாக இரண்டு நகரங்களுக்கு விமான சேவை’- ஸ்கூட் அறிவிப்பு!

"சென்னை, சிங்கப்பூர் இடையே விமான சேவை"- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஸ்கூட் நிறுவனம்!
Photo: Flyscoot

 

புதிதாக இரண்டு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படும் என்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் (Flyscoot) நிறுவனம் அறிவித்துள்ளது.

‘ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் ஸ்ரீ நவாக்ஷரி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறும்’ என அறிவிப்பு!

இது குறித்து ஸ்கூட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து நாட்டின் கோ சாமுய் (Koh Samui), மலேசியா நாட்டின் சிபூ (Sibu) ஆகிய இரண்டு நகரங்களுக்கு இருமார்க்கத்திலும் விமான சேவை வழங்கப்படும். அதேபோல், பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய E190-E2 விமானங்கள், வரும் மே முதல் பயணிகளுக்கு விமான சேவைகளை வழங்கவிருக்கிறது. இந்த விமானத்தில் இருபுறமும் இரண்டு இருக்கைகள் மட்டுமே உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது!

புதிய நகரங்களுடன் சேர்த்து ஸ்கூட் நிறுவனம் விமான சேவை வழங்கும் நகரங்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ஸ்கூட் நிறுவனம், மலிவுக் கட்டணத்தில் பயணிகளுக்கு உயர்தர விமான சேவைகளை வழங்கி வருகிறது.