பொது சேவை பிரிவை சேர்ந்த (PSD) சில தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இந்த அக்டோபர் மாதம் முதல் சம்பளம் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இவர்களுக்கான சம்பளம் கடைசியாக 15 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஏன்பா தேவையில்லை வேலை…” – இந்திய ஊழியருக்கு சிங்கப்பூரில் சிறை
அதாவது 2007-2008 ஆம் ஆண்டில் அவர்களுக்கான சம்பளம் மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது இது மாற்றப்பட்டது.
இந்த சம்பள உயர்வின் காரணமாக அந்த சேவை துறையில் உள்ள முக்கிய திறமை வாய்ந்தவர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுச் சேவை அதிகாரிகளின் சம்பளத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து தேவையான மாற்றம் செய்யப்படும் எனவும் பொதுச் சேவை பிரிவு தெரிவித்துள்ளது.