சிங்கப்பூரில் இன்னொருவரின் காதலியை வன்புணர்வு செய்த இந்திய ஆடவருக்கு நேர்ந்த நிலை – இனி இந்த சமாச்சாரமே வேண்டாம் சாமி!

Singapore job scam money mules
File Photo : Singapore Police

சிங்கப்பூரில் 26 வயது ஆண் ஒரு­வர், இன்­னொ­ரு­வர் அவ­ரது காத­லி­யு­டன் பாலி­யல் ரீதி­யி­லான நட­வ­டிக்கையில் இருக்கும் போது, அந்­தப் பெண்­ணுக்­குத் தெரி­யா­மல் இவரும் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

26 வயது ஸ்ரீஹரி மகேந்திரன் என்ற வாலிபருக்கு இந்த குற்றத்திற்காக, 17 ஆண்டுகள் 10 மாதச் சிறைத் தண்டனையும் 14 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

பாலியல் வன்புணர்வு, வேறுசில பாலியல் குற்றங்கள் ஆகியவற்றின் தொடர்பில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

ஸ்ரீஹரிக்கு வழங்கப்பட்ட தண்டனை, குற்றத்தில் அவர் வகித்த பங்குக்கு ஏற்ப இல்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.

அந்த வழக்கை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனனின் தலைமையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரித்தது.

ஸ்ரீஹரிக்கு கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனை குறையற்றது என்று மூன்று மேல்முறையீட்டு நீதிபதிகளும் தெளிவுபடுத்தினர்.

ஸ்ரீஹரிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறைக்கப்பட்டபோதும் பிரம்படிகள் குறைக்கப்படவில்லை.

30 வயது முன்னாள் துணை காவல் அதிகாரி, தன் காதலியுடன் இன்னோர் ஆடவர் பாலியல் உணவில் ஈடுபடுவதைப் பார்க்க விரும்பினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் அந்தப் பெண்ணை ஸ்ரீஹரி பாலியல் வன்புணர்வு செய்வதற்கு துணை போனதற்காக, அவருக்கு 19 ஆண்டுகள், 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், அவருக்கு 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் உள்ளார்.