நடுவானில் பறந்த விமானத்தில் பாம்பு!

Photo: Air India Express Official Twitter Page

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு (Air India Express) சொந்தமான போயிங் 737 ரக விமானம் (Boeing 737), கேரள மாநிலம், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் துபாய்க்கு சென்றது.

போலீசாரிடம் பிடிபட்ட 376 நபர்கள் – தொடரும் விசாரணை

இந்த விமானம், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (Dubai International Airport) தரையிறங்கிய போது, விமானத்தில் சரக்குகள் வைக்கும் பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை முழுமையாக சுத்தம் செய்தனர். இதனால் துபாயில் இருந்து கோழிக்கோடு திரும்ப வேண்டிய பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய ஏற்பட்டது.

வெளிநாட்டு பணிப்பெண்கள் துன்புறுத்தல்: சொல்லி எடுக்கும் வேலை ஒன்று, செய்ய சொல்வது ஒன்று

விமானத்தில் பாம்பு இருந்தது குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.