ஹாங்காங் மற்றும் மக்காவோவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயண கட்டுப்பாடுகளை கடந்த வாரம் சிங்கப்பூர் தளர்த்தியது.
இதையடுத்து, தற்போது ஹாங்காங் மற்றும் மக்காவோவிலிருந்து சிங்கப்பூருக்கு வர 243 பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கிலிருந்து 230 பயணிகளுக்கும், மக்காவோவிலிருந்து 13 பயணிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விபரங்களை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தாெற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு – இந்த மாதத்தின் 15வது இறப்பு இது
Air Travel Pass எனப்படும் விமானப் பயண அனுமதி அட்டை திட்டத்தின் கீழ், சிங்கப்பூருக்கு வரும் முதல் குறுகிய கால வருகையாளர்கள் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹாங்காங் மற்றும் மக்காவோவிலிருந்து விமானப் பயண அனுமதி அட்டை திட்டத்தின் கீழ், பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தவுடன் அவர்களுக்கு COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பின்னர், கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றும், தங்கள் சொந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டி: முதல் தங்கப்பதக்கம் வென்ற சிங்கப்பூரின் சிங்கப்பெண்..!