ஏர்ஏசியா விமானத்தில் கோளாறு: சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் – 30 நிமிடம் சிக்கி தவித்த பயணிகள்

airasia-plane-changi-airport stuck
patch6388 / TikTok

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய ஏர்ஏசியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அதில் பயணித்த பயணிகள் ஏராளமானோர் விமானத்திற்குள் அரை மணி நேரம் சிக்கிக் கொண்டனர்.

தெம்பனீஸில் ஆயுதத்தை வைத்து சுழற்றிக்கொண்டு, தன்னை தானே தாக்கிக்கொண்ட பெண் – டேசர் மூலம் சுட்டு கைது

அச்சமயம், அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. TikToker, பயனர் ஒருவர் விமானத்தின் உள்ளே சிக்கி இருக்கும் சிறிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

பயணிகள் முழுமையான இருளில் அமர்ந்திருப்பதை அந்த வீடியோவில் காண முடிந்தது. மற்றொரு வீடியோவில் பயணிகள் நின்று, விமானத்தை விட்டு வெளியேறக் காத்திருப்பதையும் காண முடிந்தது.

ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கு ஏர் கண்டிஷனிங் இல்லாமல் பயணிகள் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

விமானத்தில் மின் கோளாறு காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறை தண்டனை விதிப்பு