கோர விபத்தில் சிக்கி ஆடவர் பலி… கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக டிரைவர் கைது

சிங்கப்பூரில் நேற்று செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 6:40 மணியளவில் ஏற்பட்ட கோர விபத்தில் 52 வயதுடைய ஆடவர் உயிரிழந்தார்.

அல்ஜூனைட் சாலை மற்றும் சிம்ஸ் அவென்யூ சந்திப்பில் ஏற்பட்ட பாதசாரி மற்றும் கார் சம்பந்தப்பட்ட இந்த கோர விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் (SPF) கூறினர்.

ராணி 2ம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அதிபர் ஹலிமா யாக்கோப்

விபத்தில் சிக்கிய பாதசாரி அசையாமல் கிடந்ததாகவும், பின்னர் சோதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டதாகவும் SCDF கூறியுள்ளது.

காரை ஓட்டிச் சென்ற 86 வயது முதியவர், கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Video: https://www.facebook.com/SgRoadsaccidentcom/videos/

உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் கடும் தீ… உள்ளே இருந்த சுமார் 25 ஊழியர்கள்: விரைந்த SCDF