சிங்கப்பூர் நுழையும்/பயணிக்கும்/மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் நாளை முதல் புதிய நடைமுறை!

Roslan Rahman/AFP

சிங்கப்பூர் நுழையும் அல்லது பயணிக்கும் அல்லது மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் நாளை டிசம்பர் 3 (சிங்கப்பூர் நேரம்) முதல் புதிய நடைமுறை நடப்புக்கு வருகிறது.

சிங்கப்பூரின் கிருமி ஆபத்து பட்டியலில், வகை Iல் உள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகள் உட்பட அனைத்து பயணிகளுக்கும் இது பொருந்தும்.

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு நிலவழி VTLகீழ் பயணம் செய்த ஆடவருக்கு கோவிட்-19 தொற்று

பயணிகள் சிங்கப்பூருக்குப் புறப்படும் இரண்டு நாட்களுக்குள், புறப்படுவதற்கு முந்தைய கிருமி சோதனைசெய்து “நெகடிவ்” முடிவைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், வகை II (VTL அல்லாத), III மற்றும் IV நாடுகளைச் சேர்ந்த பயணிகள் உட்பட, சிங்கப்பூருக்குள் நுழைபவர்கள், PCR பரிசோதனையை வந்தவுடன் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரின் VTL திட்டத்தின்கீழ் டிசம்பர் 2ஆம் தேதி 23:59 மணிக்கு பிறகு வருபவர்கள் ART விரைவு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அவர்கள் வந்த பிறகு 3ஆம் நாள் மற்றும் 7ஆம் நாட்களில் விரைவு சோதனை நிலையங்களில் (Quick Test Centre) சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதலாக தகவல் கிடைக்கும் வரை கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிதல் மற்றும் தீவீரமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை முடுக்கி விடுவதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது என்று சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம்!