கடந்த அக்.17- ஆம் தேதி அன்று காலை தென் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங், சென்னையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், உலக நாயகனுமான கமல்ஹாசனை நேரில் சந்தித்துப் பேசினார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!
இது குறித்து சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் கமல்ஹாசனை சந்தித்தேன்; அவருடன் நல்ல உரையாடல்; ஒரு கப் காஃபி அருந்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பயணிகளின் லக்கேஜ்களை இறக்காமல் வேறு பயணிகளுடன் மீண்டும் இந்தியா பறந்த இண்டிகோ விமானம்
இந்த சந்திப்பின் போது, சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங், நடிகர் கமல்ஹாசனுக்கு சிங்கப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தைப் பரிசளித்தார்.
Great start to the week meeting the one and only @ikamalhaasan, also known to the many fans of his stellar work in Indian cinema as #Ulaganayagan! Good chat & catch up over a cup of morning coffee 🙏🏼
– CG Pang pic.twitter.com/cT1d0FL3rj
— Singapore in India (@SGinIndia) October 17, 2023