சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் பயணிகளை இறக்கிவிட்டு அவர்களின் லக்கேஜ்களை இறக்கி வைக்காமல் மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
செவ்வாய்க் கிழமை காலை பெங்களூருக்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சிங்கப்பூக்கே திரும்பியது.
சிங்கப்பூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் இண்டிகோ 6E-1006 விமானத்தில் லக்கேஜ் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் கூறியது.
இதன் காரணமாக விமானம் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியது என்றும், இதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதாகவும் விமான நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தூக்கம் இல்லாமல் கடும் அவதியை சந்தித்ததாக சில சமூக ஊடக பயனர்கள் இந்த சம்பவம் குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
IndiGo நிறுவனத்தை டேக் செய்து, X தளத்தில் பயனர் ஒருவர் கூறியதாவது; “சாத்தியமற்றதைச் செய்து காட்டியதற்கு வாழ்த்துகள்…” என்று காட்டமாக பதிவிட்டார்.
மோசமான நிர்வாகம் என்றும் சிலர் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.