சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி அன்று தனது கடையில் வேலை சார்ந்த ஒன்றுகூடல் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக ஆரச்சர்ட் சாலையில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தில் ஒருவரின் வேலை கடைசி நாளை கொண்டாட அதன் ஊழியர்கள் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடையில் ஒன்றுகூடியதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளது.
இரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் உட்பட மொத்தம் 20 குழுமங்கள் கண்காணிப்பில்…
அந்த நிகழ்ச்சியில், 50 நபர்களுக்கு மேல் கலந்துகொண்டு ஒன்றுகூடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் COVID-19 தற்காலிக நடவடிக்கைகள் (கட்டுப்பாடு ஆணை) 2020க்கு கீழ் செயல்பட அனுமதி உள்ள நிறுவனங்கள், ஊழியர்களை ஒன்றுகூட வைக்கும் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
சிங்கப்பூரில் தடுப்பூசி குறித்த நிலவரம் – இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது?