சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை: 130க்கும் மேற்பட்டோர் கைது

arrested spore yishun
Photo: CNB

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் சந்தேகத்திற்கிடமான 134 பேர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

அவர்களில் 14 வயதுடைய இரண்டு இளையர்களும் அடங்குவர் என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) கூறியுள்ளது.

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு.. 7மீ நீளம், 140 கிலோ எடை – நகர முடியாமல் சிக்கியது

தீவு முழுவதும் கடந்த அக்.8 மற்றும் அக்.20 க்கு இடையில் CNB அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த இரு இளையர்களும் யுஷூன் வட்டாரத்தில் கடந்த அக்.8 அன்று கைது செய்யப்பட்டனர் என்று CNB தெரிவித்துள்ளது.

அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் அவற்றின் மதிப்பு சுமார் S$606,000 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

பசியாக இருப்பதாகக் கூறி யாசகம் வாங்கிய பெண்.. லாட்டரி டிக்கெட் வாங்க வரிசையில் நின்றதால் அதிர்ச்சி அடைந்த ஆடவர்