சிங்கப்பூர் “பஞ்சமுக ஆஞ்சநேயர்” – சக்திவாய்ந்த கோவில்.. வேண்டியது அப்படியே நடக்கும் அதிசயம்!

சிங்கப்பூரிலுள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்
Google Map

சிங்கப்பூரிலுள்ள அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம் பக்தர்களால் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

அங்கு வேண்டி கொள்ளும் அனைத்து பிராத்தனைகளும் நிறைவேறுவதாகவும் பலர் கூற கேட்டுள்ளதாக சிங்கப்பூர் வலையொளி மூலம் ஒருவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரை விட்டு தப்பியோடிய ஆடவர்.. சிறை, பிரம்படி விதித்து தீர்ப்பு

செங்காங்கில் உள்ள 50 ரிவர்வேல் கிரெசென்டில் இந்த கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அங்குள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதி மிகவும் சக்திவாய்ந்த கடவுளாக இந்து பக்தர்களால் சொல்லப்படுகிறது.

அதாவது அங்கு வேண்டி கொள்ளும் 90 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு வேண்டியது அப்படியே நிறைவேறியதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 வாரம், ஒவ்வொரு செவ்வாக்கிழமையும் காலை வேளையில் அங்கு சென்று பிராத்தித்து, இறுதியாக வடமாலை சாத்தினால் கேட்டது நடக்கும் என்பது நம்பிக்கை.

வேலை இல்லாமல் இருந்த ஒருவர் தொடர்ந்து 6 வாரங்கள் அங்கு சென்று பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி இறுதியாக வடமாலை சாத்தியதாகவும், அடுத்த வாரமே அவருக்கு வேலை கிடைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதே போல, திருமணம் ஆகாமல் இருந்த ஒருவர் அவ்வாறு பிராத்தனை செய்ததாகவும் 2 வாரத்தில் அவருக்கு வரன் கிடைத்து திருமணம் நிச்சயம் ஆனதாகவும் கூறப்படுகிறது.

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை கோவில் திறந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புக்கிட் பாடோக்கில் கால்வாயில் சறுக்கி விழுந்த கார் – மருத்துவமனையில் ஓட்டுநர்