சிங்கப்பூர்: அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தானியக்க குடிநுழைவு பாதைகள் திறக்கப்படும்.
என்றாலும், சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளுக்கு தனியாக சில பாதைகள் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“இதுபோன்ற பிரத்யேக பாதைகள் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒதுக்கப்படும்.”
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்கு உள்துறை துணையமைச்சர் முஹம்மது பைசல் இப்ராஹிம் அவ்வாறு பதிலளித்தார்.
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இருந்து, அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தானியங்கி பாதைகள் பயன்பாட்டுக்கு வரும் என குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது.
அவர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் சரி, தானியங்கி பாதைகளைப் பயன்படுத்தி விமானம், தரை மற்றும் கடல் வழி சோதனைச் சாவடிகளில் குடிநுழைவு அனுமதியை பெற முடியும்.