சிங்கப்பூரில் 35 வயது பெண் மற்றும் 5 வாரக் கைக்குழந்தையின் சடலம் கண்டெடுப்பு.!

Bedok baby and women Death
Pic: Google Street view

பிடோக் வடக்கு சாலையில் (Bedok North Road) உள்ள ஒரு குடியிருப்பின் கீழ்தளத்தில், நேற்று (29-10-2020) 35 வயதுமிக்க பெண் மற்றும் 5 வாரக் கைக்குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, நேற்று மாலை 5.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் வெளிநாட்டு விமான சேவைகளுக்கான தடை நீட்டிப்பு..!

பிடோக் வடக்கு சாலையில் உள்ள ஒரு குடியிருப்பின் கீழ்தளத்தில், 35 வயதுமிக்க பெண் மற்றும் 5 வாரக் கைக்குழந்தை இறந்து கிடந்ததை அங்கு சென்ற மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும், இந்த இயற்கைக்கு மாறான மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல கூடுதல் விமானங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…