சிங்கப்பூர்: Bedok Reservoir சாலையின் உள்ள குடியிருப்பு பிளாக்கில் நேற்று (பிப்.8) 66 வயதான பெண் ஒருவர் இறந்து கிடந்தார்.
அதாவது அன்று மாலை 4.50 மணியளவில் 110 பிளாக்கில் இருந்து போலீசாருக்கு இது குறித்து புகார் வந்ததாக கூறியுள்ளனர்.
தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிரடி மாற்றங்கள் – மார்ச் 1 முதல்…
அது இயற்கைக்கு மாறான மரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் சென்று பார்த்தபோது அந்த பெண் அசையாமல் கிடந்தார் என்றும் பின்னர் சோதித்ததில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு இனி ஈஸியா வரலாம், போகலாம்.. வெளிநாட்டு பயணிகளுக்கு செம அப்டேட்
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இதில் ஏதும் சதி நடந்துள்ளதாக போலீசாருக்கு சந்தேகம் இல்லை.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
விபத்தில் சிக்கி ஊழியர் மரணம் – வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க நிறுவனத்துக்கு தடை