இந்தியாவில் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் (Indigo Airlines). இந்த நிறுவனம், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை, பெங்களூரு, திருச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட 16 நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து இந்திய நகரங்களுக்கும் நேரடி மற்றும் கனெக்ட் விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் வழங்கி வருகிறது.
சிங்கப்பூர் அதிபர் தேர்தல்- வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு!
அதன் தொடர்ச்சியாக, ஒடிஷா மாநிலம், புவனேஸ்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் மட்டும் புவனேஸ்வர் மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவை வழங்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடக்க சலுகையாக, புவனேஸ்வரில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கு பயணக் கட்டணமாக ரூபாய் 6,453 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது குறித்தக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.