தந்தை இறந்தது கூட தெரியாமல் 5 நாள் சடலத்துடன் இருந்த புத்தி சுவாதீனம் இல்லா மகன்

body-of-man-found-hougang
Shin Min and Google Maps

சிங்கப்பூரில் பிளாக் 25 ஹூகாங் அவென்யூ 3 இல் உள்ள வீட்டில் 81 வயது முதியவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அந்த சடலம், நேற்று முன்தினம் டிச.14 அன்று காலை 11:20 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் முதலில் இருந்தா.. “முகக்கவசம்” இனி தேவை – வரும் டிச.19 முதல் தினசரி பாதிப்பு வெளியாகும்

சோகமான செய்தி என்னவென்றால், அவருக்கு உடற்குறைபாடு உடைய மகன் ஒருவர் உள்ளார்.

தன் தந்தையின் பராமரிப்பை நம்பி வாழ்ந்த மகன், சடலத்துடன் குறைந்தது ஐந்து நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

ஷின் மின்னிடம் இது பற்றி கூறிய பக்கத்து வீட்டுக்காரர்; அந்த முதியவரின் மகனுக்கு 30 அல்லது 40 வயதுக்குள் இருக்கும் என்பதை சொன்னார்.

அவரின் மகனுக்கு நுண்ணறிவு (IQ) குறைவு என்றும், அவர் பெரும்பாலும் தந்தையையே சார்ந்திருந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் முதியவரைக் கடைசியாகப் பார்த்ததாக பக்கத்து வீட்டுக்காரர் நினைவு கூர்ந்தார்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் இரவிலிருந்தே துர்நாற்றம் வீசுவதைக் கவனித்ததாக அங்கு வசிக்கும் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, SCDF அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அவர்கள் உறுதி செய்தனர்.

முதியவர் இறந்துவிட்டதாக சம்பவ இடத்திலேயே SCDF துணை மருத்துவர்கள் உறுதி செய்து அறிவித்தனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

மறைந்த முதியவர், உடல்நிலை சரியில்லாத தனது மகனைப் பற்றி மிகவும் கவலைப்படுவார் என்றும், குறிப்பாக தாம் மரணித்த பிறகு மகனை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதையும் சொல்லிக்கொண்டே இருப்பார் என்றும் அண்டைவீட்டார் கூறினார்.

பெண்களை குறிவைத்து 18 ஆண்டுகளாக தகாத படங்களை எடுத்துவந்த கட்டுமான துறையை சேர்ந்தவருக்கு சிறை