துவாஸ் அருகே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது சடலம் ஒன்று மீட்பு..!

Body recovered during search and rescue operations in waters near Tuas; 2 others missing
Body recovered during search and rescue operations in waters near Tuas; 2 others missing (Photo: TODAY)

துவாஸ் அருகே தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது கடலோர காவல்படையால் புதன்கிழமை (ஜூலை 8) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இதில் 3 பேர் கப்பலில் இருந்து விழுந்ததாக, கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மலேசிய அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதாக, கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் (MPA) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!

துவாஸிலிருந்து சுமார் 2.1 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

MBAவின் இரு ரோந்து கப்பல், கடலோர காவல்படை மற்றும் ஒரு சிங்கப்பூர் கடற்படை கப்பல் ஆகியவை இந்த தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

இதில் கடலோர காவல்படை நேற்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் அந்த சடலத்தை கண்டதாக MBAக்கு அறிவித்தது.

மீட்கப்பட்ட அந்த சடலம் கடலில் விழுந்தவர்களில் ஒருவர் என்றும், மேலும் காணாமல் போன மற்ற இருவரையும் தேடிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக நோய்த்தொற்று பாதித்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg