இசைக்கவி ரமணனின் ‘கம்ப தரிசனம்’ என்ற நூலை வெளியிட்ட அமைச்சர் கா.சண்முகம்!

Photo: LISHA

சிங்கப்பூரில் எண்.1 பீட்டி சாலையில் (No.1 Beatty Road) அமைந்துள்ள உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் லிஷா (LISHA) மற்றும் லிஷா இலக்கிய மன்றம் (LISHA Literary) ஏற்பாடு செய்திருந்த இசைக்கவி ரமணனின் ‘கம்ப தரிசனம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று (20/11/2022) மாலை 06.30 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் சிங்கப்பூரின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியையொட்டி, நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி!

பின்னர், இசைக்கவி ரமணனின் ‘கம்ப தரிசனம்’ நூலை அமைச்சர் வெளியிட்டார். இந்த நூலை லிஷா அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். விழாவில், தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவுக்கு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆதரவு வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.