இலங்கை நாட்டவர் உட்பட இரு வெளிநாட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு சிறை

boon-keng-taxi
Google Maps street view

பூன் கெங் MRT நிலையத்தின் டாக்ஸி ஸ்டாண்டில் இருவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தானாக முன்வந்து தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 66 வயதான Xie Fubao, என்பவருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

“இது உனக்கு பிடிக்குமா..?” சிறுமியிடம் தன் உறுப்பை காட்டிய வெளிநாட்டு இளைஞருக்கு சிறை

மேலும், 59 வயதான சென் தைக்கிங் என்ற மற்றொருவருக்கு ஏழு வார சிறைத்தண்டனை மற்றும் S$4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சென், தொற்றுநோய்களின் போது சட்டவிரோதமாக ஒன்றுகூடி சூதாடியது கண்டறியப்பட்டதால் கூடுலாக நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

52 வயதான இலங்கை ஆடவரும், 56 வயதான கொகேசியன் ஆடவரும் சம்பவத்திற்கு முன் தனியார் வாடகை காருக்காக காத்திருந்தனர்.

அச்சமயம் கியூவில் நின்றவர்களிடையே கார் ஏறுவதில்லை நடந்த குளறுபடியால், அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையில் போய் முடிந்தது.

அதில் அவர்களால் தாக்கப்பட்ட இலங்கை ஆடவர் தலையில் இரத்தம் வழிந்தோடிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் நவம்பர் 20, 2020 அன்று இரவு சுமார் 11:10 மணிக்கு நடந்தது.

‘MWC’ ஏற்பாடு செய்துள்ள தொழிலாளர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரபல திரைப்பட இயக்குநர் சசிகுமார்!